விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

August 30, 2010

இலங்கை கிரிக்கெட் தொடர், சூதாட்டம், சேவாக் சங்கக்காரா தொடர்பு...

டிஸ்க்:  தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தம் இல்லை.படங்கள், கருத்துக்கள் சிரிக்க மட்டுமே...






கீழே இருப்பது இது போனஸ்






பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க..
உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணுங்க...



முழுவதும் படிக்க >>

August 20, 2010

ஒரு புரட்(டு)சிகாரனின் புலம்பல்கள்....


டிஸ்க்:புலம்பல்கள் என்பதால் கொஞ்சம் கோர்வையாக இருக்காது. 

தயவு செய்து என்னை யாரும் புரட்சிக்காரன் என்று சொல்லாதீர்கள். நான் ஒரு புரட்டுக்காரன்.

எனக்கு கம்யுனிசம் பிடிக்கும். கம்யுனிஸ்டுகளை பிடிக்காது. நண்பர்களை பிடிக்கும். தோழர்களை பிடிக்காது. கடவுள் நம்பிக்கை உண்டு. மத நம்பிக்கை கிடையாது. இவை எல்லாமே என் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள். காலநிலை, மனநிலை பொறுத்து இவை மாறும். ஆகவே நான் ஒரு புரட்டுக்காரன். ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் மாறியதே இல்லை. அது என் பண்பு. எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், அயோக்கியனாக இருந்தாலும் அவனும் ஒரு மனிதன்தான். அவனை இழித்துக்கூறவும், பழித்துககூறவும் ஆயிரம் காரணம் இருந்தாலும், இவற்றை செய்யாமல் இருக்க ஒரே ஒரு காரணம்தான் உண்டு. அது நான் கற்ற பண்பு. 

மேலே சொன்ன பிடிக்காதுகள் எல்லாம் கொஞ்ச நாளாகத்தான் பிடிக்காதுகள் ஆகி இருக்கிறது. பதிவுகள் படிக்க ஆரம்பித்ததில் இருந்து. காரணம் கொஞ்சம் எழுத்து திறமையும், நாலு பேரின் ஆதரவும் இருந்துவிட்டால் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்ற செய்கைகள். முதலில் சமூகத்தில் பிரபலமாக உள்ள ஒருவரின் மீது காரித்துப்புவது. அது அவர் முகத்தில் படாது என்பது வேறு விஷயம். ஏன் என்றால் அவ்வளவு உயரத்துக்கு அண்ணாந்து துப்பினால் அது எங்கே விழும் என்று தெரிந்ததே. ஆனாலும் அந்த பிரபலத்தின் அபிமானிகள் கோபம் கொண்டு ஏதாவது சொல்லிவிட்டால், "ஆஹா சிக்கிட்டாண்டா அடிமை!!" என்று சுற்றி நின்று கொண்டு துப்புவது. 

"அட ஏன்டா துப்புர?" என்று இன்னொருவன் அவனுக்கும் அதுவே பரிசு. வெளிப்படையாவே சொல்கிறேன். ஒரு நடிகனுக்கோ, கிரிக்கெட் வீரனுக்கோ ரசிகனாக இருப்பது தவறில்லை. அவனுக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணிப்பது, அவனை கடவுளாக கொண்டாடுவது தவறுதான். இதை சுட்டிக்காட்ட வேண்டும் என்பது நோக்கம் என்றால் நேரடியாக எழுதி விட்டால் முடிந்தது. அதை விடுத்தது, ரஜினி வயசென்ன, அவன் அப்பன் வயசென்ன என்றெல்லாம் எழுதுவது உங்கள் நோக்கம் ரசிகனை திருத்துவதல்ல. எல்லோரும் கொண்டாடும் ஒருவரை வசை பாடி உங்கள் வக்கிரத்தை காட்டுவது என்பதை தெளிவு படுத்துகிறது. ஒரு பதிவில் கருத்துரையிட்ட ஒரு நண்பர் காந்தியையும் ஸ்டாலினையும் ஒப்பிட்டு கூறினார். உடனே வெகுண்டெழுந்த தோழர், ஸ்டாலின் பக்கத்தில் நிற்க கூட தகுதி இல்லாதவன் இந்த காந்தி, துரோகி நாய் என்று ஆரம்பித்து விட்டார். ஏனென்றால் ஸ்டாலின் ஒரு மகாத்மா. ஸ்டாலின் மகாத்மாவாகவே இருந்து விட்டு போகட்டும். காந்தி என்ன நாயை விட கேவலமாக போய் விட்டாரா.

இன்னும் கொஞ்சநாள் போனால், சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் ரஜினியையும், இருபது ஆண்டுகளுக்கு முன்னால் ஏ ஆர் ரகுமானையும், பாலச்சந்தர் என்ற பார்ப்பனர், பாட்டாளி வார்க்கத்தை அழிக்க வேண்டும் என்பதற்காகவே உருவாக்கினர் என்று கூட சொல்வார்கள். அதாவது எங்கே ஒடுக்கப்பட்டவர்கள் மீண்டேளுந்து விடுவார்களோ என்று அஞ்சிய பார்ப்பன சக்தியான ரஜினி , ரகுமான் போன்றோர் திட்டமிட்டு திரைத்துறைக்கு வந்து, பொது மக்களின் மூளைகளை மழுங்கடித்து கொண்டிருக்கிறார்கள் என்றும் சொல்வார்கள். முடிந்த வரை காரி துப்பியாகி விட்டது. எவனாவது வந்து நாங்கள் எல்லாம் அப்படி இல்லை என்று சொன்னால், நான் உன்னை சொல்லவில்லை. உன் தலைவனையும் சொல்லவில்லை. முட்டாள் ரசிகனைப்பார்த்துதான் சொன்னேன் என்பார்கள்.

எனக்கு எதைப்பற்றியும் கவலை இல்லை. யாரை பற்றியும் தெரியாது. பதிவுலகத்துக்கு வருமுன் ஒரு சில விஷயங்களின் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தேன். இப்போது அது சுத்தமாக போய் விட்டது. அவற்றில் ஒன்று கம்யுனிசம். அதற்க்கு காரணம் முதலாளிகள் அல்ல. கம்யுனிசம் பிடித்துவிட்டால் காந்தியை திட்ட வேண்டுமா என்ன? கடவுள் ஒரு மது போதையாம். தோழர் சொல்கிறார். சரிதான். கடவுளையும் மதுவையும் ஒரே தட்டில் வைக்கும் போதே தெரிந்து விடுகிறது உங்களின் தரம். கம்யுனிசத்தை மறுப்பவன் கண்டிப்பாக நமிதாவின் தொப்புளுக்கு அடிமையாகத்தான் இருப்பானாம். என்ன கீழ்த்தரமான எண்ணம். இதை உங்களுக்கு கற்றுக்கொடுத்தது கம்யுனிசமா இல்லை உங்கள் கண்ணியமான தோழர்களா? 

ஒன்று மட்டும் புரிகிறது, கம்யுனிசவாதியோ, முதலாளியோ, ஆத்திகனோ, நாத்திகனோ தான் வைப்பதுதான் சட்டம். தன் சித்தாந்தம் தான் சரி என்று நினைக்கிறான். அது பதிவுலகத்திலும்தான். கம்யுனிசத்தை எதிர்ப்பவர்கள் தங்களின் சூ..க்குள் தலையை நுழைத்துகொண்டவர்கள் என்பது போன்ற ஒரு படத்தை வெளியிட்டு தோழர் ஒருவர் புரட்சி மன்னிக்கவும், கடமையை செய்திருக்கிறார். அதாவது அவருக்கு புரட்சி என்பது பெரிய வார்த்தை. இதை கண்டதும் எழுந்த ஆதங்கத்திலேயே இந்த பதிவு எழுதி இருக்கிறேன். 

பி. கு. இதற்கு வரும் பின்னூட்டங்களில் ஆமாம் காந்தி நாய்தான், காரி துப்ப முடியாத அளவுக்கு ரஜினி என்ன அவ்வளவு உயரமா? ஈழத்தில் தமிழன் துன்புறுகிறான், போபால் பிரச்சனை சாதாரணமானதா போன்ற பின்னூட்டங்கள் வரும் என எதிர் பார்க்கிறேன்.. இந்த பதிவின் இறுதியில் தனி மனித தாக்குதலும் இருக்கிறது. அதையும் ஒப்புக்கொள்கிறேன்.



முழுவதும் படிக்க >>

August 17, 2010

வெட்டி அரட்டை- தேர்ந்த நடிகர் சங்கக்காரா, சட்டம் தன் கடமையை செய்யும்



பொதுவாகவே பதிவுகளில் உருப்படியாக எதுவும் எழுதாவிட்டாலும், ஒரு முழு நீள கட்டுரையாக இல்லாமல் பிட்டு செய்திகள் எழுதுவதை இனி வெட்டி அரட்டை என்ற தலைப்பில் தரலாம் என்று எண்ணி இருக்கிறேன்.


தேர்ந்த நடிகர் சங்கக்காரா...


உப்பு சப்பில்லாத ஒரு படம் கிளைமாக்ஸ் காட்சியில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருந்தது நேற்று நடந்த இந்திய இலங்கை அணிகளுக்கு இடையே நடந்த ஒருநாள் ஆட்டம். இப்படி ஒரு மகா மட்டமான ஆட்டத்தை இரண்டு அணிகளுமே சமீப காலமாக வெளிப்படுத்தி வருகின்றன. அணியில் இருந்த பெருந்தலைகளின் இடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் இருப்பது கூட காரணமாக இருக்கலாம். தம்புலா மைதானத்தில் இதற்கு முன் பல ஆட்டங்களில் நிறைய அணிகள் முன்னூறுக்கு மேல் எடுத்துள்ளன. வழக்கமாக ஆட்டத்தின் தொடக்கத்திலேயே அவசரப்பட்டு தன் விக்கெட்டை இழந்துவிடும் சேவாக் நேற்று நிதானமாக ஆடினார். 



ஒரு கட்டத்தில் இந்திய அணி வெற்றிபெற முப்பத்தைந்து ரன்களே எடுக்கவேண்டிய கட்டத்தில், சேவாக் சதம் அடிக்க இருபத்தைந்து ரன்கள் தேவை என்ற நிலை வந்ததும், சேவாக் அதிரடியாக ஆடி சதத்தை நெருங்கினார். கடைசியில் வெற்றிபெற ஐந்து ரன்கள் மட்டுமே தேவை, சேவாக் சதம் அடிக்க ஒரே ஒரு ரன் தேவை. ரந்திவ் வீசிய பந்தை அதுவரை அபாரமாக கீப்பிங் செய்து வந்த சங்கக்காரா தவற விட (!!??) பந்து பவுண்டரிக்கு சென்றது. இன்னும் ஒரே ஒரு ரன் தேவை. ரந்திவ் வீசிய பந்தை இறங்கி வந்து வெளியே அனுப்புகிறார் சேவாக். கடைசியில் அது நோ பால் என அறிவிக்கப்பட, சேவாக் அடித்த சிக்சர் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது, நோ பாலில் கிடைத்த ஒரு ரன் மூலம் இந்தியா வென்று விட்டது என்று சொல்லி விட்டார்கள். சேவாக் 99 ரன்களில் ஆட்டமிழக்காமல் ஏமாற்றத்துடன் திரும்புகிறார்.

சர்ச்சையை கிளப்பிய அந்த நோ பால் இதோ கீழே...


இது தெரியாத்தனமாக வீசப்பட்ட நோ பால் அல்ல என்பது டிவி ரீப்ளேயில் தெள்ள தெளிவாக தெரிந்தது. அதாவது பவுலரின் முன்னங்கால் லேசாக கிரீசுக்கு வெளியே சென்று விட்டால் அது தெரியாத்தனமாக நடந்தது என்று சொல்லி விடலாம். ஆனால் அவரின் பின்னங்காலே கிரீசுக்கு வெகு அருகில் இருந்தது. முன்னங்காலோ கிரீசுக்கு வெளியே வெகு தொலைவில். இத்தனைக்கும் அவர் வேகப்பந்து வீச்சாளர் அல்ல. வளர்ந்து வரும் ஒரு கிரிக்கெட் வீரர் இப்படி ஒருவரின் தனி நபர் சாதனையை தடுக்கும் வகையில் செயல்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது. 


இது குறித்து சேவாக் கூறும்போது, "அது வேண்டும் என்றே வீசப்பட்ட நோ பால். யாருக்குமே எதிர் அணியில் ஒருவர் சதம் அடிப்பது பிடிக்காது. ஆகவே இது நடப்பது இயல்புதான்." என்றார். சங்கக்காரா, "எனக்கு எதுவுமே தெரியாது." என்று சொல்லி விட்டார். ஆக பழி மொத்தமும் ரந்திவ் தலையில். சரிதான் சங்கக்காரா அளவுக்கு ரந்திவுக்கு நடிக்க தெரியவில்லை. அவர் எப்படி அந்த பந்தை தவற விடுவது போல பந்தை பவுண்டரி போக விட்டாரோ அதே போல கொஞ்சம் இயல்பாக இருந்திருந்தால் இந்த நோ பாலும் இந்த அளவுக்கு சர்ச்சையை கிளப்பி இருக்காது. மறுநாள் ரணதுங்கா போனில் அழைத்து தனது வீரரின் செயலுக்கு மன்னிப்பு கோரிஉள்ளார்.


சட்டம் தன் கடமையை செய்யும்...


சில நாட்களுக்கு முன்னால் சன் செய்திகள் தொலைக்காட்சியில் ஒரு செய்தியை கண்டு துணுக்குற்றேன். அதாவது சென்னையை சேர்ந்த பிரகாஷ் என்பவர், தன் பெற்றோர் சாவுக்கு காரணமாக இருந்த ஒரு சாமியாரை கருத்தில் கொண்டு, நாட்டில் பல இடங்களில் உள்ள ஆண் சாமியார்களுக்கெல்லாம் இலவசமாக வாகனம் வாங்கி தருவதாகவும், இன்சூரன்ஸ் மற்றும் சில செலவுகளுக்கு மட்டும் பணம் அனுப்புமாறும் செய்தி அனுப்பி பல லட்சம் ரூபாய்களை அபேஸ் செய்துள்ளார். மேலும் தான் அபேஸ் செய்த பணத்தைக்கொண்டு, சில பல நல்ல காரியங்களிலும் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக ஒரு விதவையை மணமுடித்துள்ளார். இவ்வாறு அந்த செய்தி ஓடிக்கொண்டிருந்தது. "ஆகா! என்னடா சங்கர் படக்கதையை மிஞ்சும் அளவுக்கு இருக்கிறதே!!" என்று ஆச்சர்யப்பட்டேன். இரண்டு நாள் கழித்து நாளிதழில் இது குறித்த செய்து வெளியானபோது, சாமியார்களை ஏமாற்றியது மட்டுமல்லாமல், பல நபர்களை வேலைவாங்கி தருவதாகக்கூறியும் ஏமாற்றியுள்ளார் என்றும் வந்திருந்தது. எனக்கு லேசாக ஒரு சந்தேகம் வந்தது. 


எங்கே இப்படியே விட்டால் இந்த பிரகாஷ் மக்கள் மத்தியில் ஒரு ஹீரோ ஆகி விடுவாரோ என்ற பயத்தில் சட்டம் தன் கடமையை செய்துவிட்டதோ? என்று. ஏனென்றால் சட்டம் நினைத்தால் எது வேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன்னால் அதிமுக ஆட்சியில் இருக்கும்போது, அதிமுக ஆதரவாளரான கராத்தே தியாகராஜன் ஒரு வாய்த்தகராறில் அதிமுக அரசை திட்டிவிட, உடனே கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். சரியாக இருபத்தி நான்கு மணிநேரத்தில் அவர்மீது இருநூறுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதாவது அவர் ஒரேநாளில் அத்தனை குற்றம் செய்தாரா? இல்லை அதுவரை தூங்கிகொண்டிருந்த சட்டம் திடீரென விழித்துக்கொண்டு, தன் கடமையை செய்ததா என்று எனக்கு இன்றுவரை புரியவில்லை.


உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...

முழுவதும் படிக்க >>

August 16, 2010

யார் இந்த பாலா?

இந்த பதிவுலகத்துக்கு வந்து நான் எழுதும் முதல் தொடர்பதிவு இது. என்னை மதித்து அழைத்த மதுமிதா அவர்களுக்கு நன்றி. அவரை நான் பின்தொடர்வது கிடையாது. பின்னூட்டம் இடுவது கிடையாது. ஆனால் அவரது பதிவுகளை தவறாமல் படிப்பேன். அவ்வளவுதான். ஆனால் என்னை கண்டுபிடித்து தொடர்பதிவு எழுத அழைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

பாலா


2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

உண்மையான பெயர்தான் ஆனால் முழுப்பெயர் பாலசுப்பிரமணியன். சுருக்கமாக எல்லோரும் அழைப்பது பாலா. அதையே என் வலைப்பதிவுக்கும் வைத்துவிட்டேன்.

3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி....

வலைப்பதிவு தமிழில் இருப்பது எனக்கு ஒரு ஆண்டுக்கு முன்னால்தான் தெரியும். எனக்கு மனதில் தோன்றும் விஷயங்களை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று எப்போதுமே தோன்றும். சுருக்கமாக சொன்னால் ஓட்டைவாய். அதற்கு வழிவகுத்து கொடுத்தது பதிவுலகம். முதன்முதலில் படித்தது உண்மைத்தமிழன். பிறகு ஹாலிவுட்பாலா, கேபிள்சங்கர் என்று பட்டியல் நீண்டு விட்டது. எழுதுவதற்கு முன் ஆறுமாதம் நிறைய பதிவுகளை படிக்க மட்டுமே செய்தேன். பின் என் எழுதும் எண்ணத்தை நிறைவேற்றினேன்.


4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

நான் என் வலைப்பதிவு பிரபலமாக ஒன்றுமே செய்யவில்லை. தமிழிஷில் இணைத்ததை தவிர. பல பதிவுகளை படித்திருக்கிறேன். அதிகம் பின்னூட்டம் இடுவதில்லை. என் கருத்துடன் முரண்பட்டால் மட்டும் என் கருத்தை பின்னூட்டமாக இடுவேன்.தோனி சொல்ல மறந்த கதை என்ற பதிவு மிக பிரபலம் அடைந்தது. இதில் காமெடி என்னவென்றால் அதனை காபி செய்து பல பேர் தன பதிவில் போட்டு கொண்டார்கள்.நண்பர்கள் பலருக்கும் மின்னஞ்சல் அனுப்பினார்கள். அது எனக்கும் வந்தது. மற்றபடி ஒன்றும் செய்ததில்லை. அப்பப்ப அஜித் விஜய் என்று எழுதி நிறைய ஓட்டு வாங்கியதுண்டு.  ஆமா என் வலைப்பதிவு எப்ப பிரபலம் ஆச்சு?


5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

எனக்கு கற்பனையும் கிடையாது, தட்டிவிட குதிரையும் கிடையாது. நான் எழுதிய எல்லாமே என் சொந்த கருத்துக்கள். அவற்றை சொல்லும்போது என் வாழ்வில் நிகழ்ந்த சில சம்பவங்களையும் சொல்லி இருக்கிறேன். விளைவு பெரிதாக எதுவும் இல்லை. ஒருவேளை நான் சொல்வது எதார்த்தமாக இருப்பதாலோ என்னவோ?


6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

இரண்டுமே இல்லை. எனக்கு பொழுதுபோக்க நிறைய வழிகள் இருக்கின்றன. அதே போல பணம் சம்பாதிக்கவும் நிறைய வழிகள் இருக்கின்றன. பதிவு எழுதுவது ஒரு மனநிறைவு, அவ்வளவுதான்.


7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

முதலில் அவசரப்பட்டு ஒரு ஆண்டுக்கு முன்னால் ஒரு பதிவு தொடங்கினேன். பின் அதை கண்டுகொள்ளவே இல்லை. தற்போது இருப்பது ஒன்றே ஒன்றுதான்.


8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

கோபம் என்பது நம் கருத்துக்கு மாற்று கருத்து தெரிவிக்கும் அனைவரிடமும் வரும். உதாரணமாக கார்க்கி தலயை கிண்டல் பண்ணும்போதெல்லாம் வரும், கடவுள் மறுப்பாளர்கள் கடவுளை திட்டும் போதெல்லாம் வரும். ஆனால் வன்மம் யார் மீதும் வந்ததில்லை. பதிவுலகம் என்றில்லை பொதுவாகவே அப்படித்தான்.

பொறாமை நிறைய பேரிடம் இருக்கிறது. ஹாலிவுட் பாலா, பட்டாப்பட்டி, நீ கேளேன் ஜெட்லி ஆகியோரின் பதிவை படிக்கும்போது அவர்களின் ஸ்டைல், நக்கல் கலந்த பதில் கண்டு பொறாமை வரும். அவர்களைப்போல் நாமும் எழுதவேண்டும் என்ற உத்வேகத்தை கொடுக்கும்.

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

முதல் பின்னூட்டம் Moulefrite என்பவர் இட்டது. தொடர்பு கொண்டது, பாராட்டியது, பாலோயர் ஆனது எல்லாமே ராஜாதான்

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

சொல்லிக்கொண்டுதான் இருக்கிறேன் பதிவுகளின் வாயிலாக.


இந்த பதிவை தொடர நான் அழைப்பவர்கள்

ராஜாவின் பார்வை - ராஜா
எப்பூடி - ஜீவதர்ஷன்
Phantom மோகன்
அக்கம்பக்கம் - அமுதா கிருஷ்ணா


முழுவதும் படிக்க >>

August 11, 2010

எந்திரன் பற்றி அவதூறாக எழுதுபவர்களை என்ன செய்யலாம்?


எந்திரன் பற்றி அவதூறாக எழுதுபவர்களை என்ன செய்யலாம்? என்று நம் மக்கள் நாயகன் அவர்களிடம் கேட்டபோது, "இதோ பாருங்க, இந்த வயித்தெரிச்சல் பிடிச்ச பசங்க இப்படித்தான் ஏதாவது சொல்லிக்கிட்டே இருப்பாங்க, அவங்களை எல்லாம் வரிசையா நிக்க வச்சு, 


...
...
...
...
...
...
...
...
...
...
...

நம்ம ஸ்டைல்ல ஒன்னு கொடுக்கணும்!!"   என்று கூறினார். 
இது எப்படி இருக்கு?
படத்துக்கு நன்றி: ஆயிரத்தில் ஒருவன்

உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...

முழுவதும் படிக்க >>

August 10, 2010

எந்திரனும், சில எதிர்வினைகளும்


எந்திரன் படம் வரும் வரை அதை பற்றி பேசக்கூடாது என்று எண்ணி இருந்தேன். ஆனால் விதி. பேசும்படி ஆகி விட்டது. இருந்தாலும் நான் பேசப்போவது எந்திரன் பற்றி அல்ல. ரஜினி பற்றி. சுமார் ஒரு நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பாக நெய்வேலி நோக்கி காவிரி பிரச்சனைக்காக நடிகர் சங்கமே திரண்டு ஒரு ஊர்வலம் நடத்தியது. இதில் ரஜினி கலந்து கொள்ளவில்லை. மாறாக சென்னையில் இருந்தே போராடலாமே என்று உண்ணாவிரதம் இருந்தார். கட்சி வித்தியாசம் இன்றி அனைவரும் வந்து ஆதரவு தெரிவித்தனர் என்பது வேறு விஷயம். நெய்வேலி ஊர்வலம் நடந்து முடிந்த பிறகு, பாரதிராஜா தலைமையில் ஒரு பொதுக்கூட்டம் நடந்தது. அதில் பேசியவர்கள் எல்லாம் காவிரி பிரச்சனை பற்றி பேசியதை விட, ரஜினி அதில் கலந்து கொள்ளாததை பற்றிதான் பேசினார்கள். அவர்கள் பேசியதில் தமிழ்பற்றோ, பொது நலமோ இருந்ததாக தெரியவில்லை. மாறாக ரஜினி என்பவரை திட்டுவதற்கு கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விடக்கூடாது என்ற முனைப்பே தெரிந்தது. நடக்கும் நிகழ்ச்சியை தான் பெரிய ஆள் என்று காட்டி கொள்ளவும் பயன்படுத்திக்கொண்டனர். இதில் வடிவேலுவும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு நடிகன், அவன் நடிகன் என்பதையும் தாண்டி மக்களால் உயர்வாக எண்ணப்படுகிறானே என்ற வயிற்றெரிச்சல், அவர்களை இப்படி எல்லாம் பேச வைத்தது. அப்போது அமீர் ஒரு பேட்டியில் கூறினார். "எதற்கெடுத்தாலும் ரஜினியையே கூப்பிடுகிறீர்களே? அவர் உங்களுக்கு என்ன பாவம் செய்தார்? உங்கள் சொந்த ஊரை எதிர்க்க சொன்னால் எதிர்ப்பதற்கு யாருக்குதான் மனசு வரும்?".




ஊருக்கு ஒதுக்கு புறமாக கட்டப்பட்ட எதாவது ஒரு பங்களாவின் வழியாக சென்றிருப்பீர்கள். நன்றாக கவனித்திருந்தால் பெரும்பாலான பங்களாக்களின் கண்ணாடி ஜன்னல்கள் கல்வீசி தாக்கப்பட்டிருக்கும். இது மனிதனின் ஈன புத்தியை காட்டும் செயல். அதாவது ஒருவன் சொந்த உழைப்பில் கூட ஒரு பங்களா கட்டி விட கூடாது. அவன் வீட்டு ஜன்னல் கண்ணாடியில் ஒரு கல்லையாவது எறிந்து களங்கம் விளைவித்து விடவேண்டும். இப்படித்தான் ரஜினி என்னும் மனிதனை நோக்கி கற்கள் எறியப்படுகின்றன. 

ரஜினி என்பவர் பிறக்கும்போதே தனவானாக பிறக்கவில்லை. அவர் பணக்காரனாக கள்ள நோட்டு அடிக்கவில்லை. ஊழல் செய்தோ வரி ஏய்ப்பு செய்தோ பிழைக்கவில்லை. தனக்கு தெரிந்த ஒரு தொழிலை செய்கிறார். இதில் அவரை குற்றம் சாட்ட என்ன இருக்கிறது? என்னமோ ரஜினி என்னும் ஒருவராலேயே இந்திய பொருளாதாரம் சரிந்தது போலவும், இளைய தலைமுறையினர் எல்லாம் தடம் மாறி போய்விட்டது போலவும் பேசுகிறார்கள். சொல்லப்போனால் தமிழ் என்று ஒரு மொழி உண்டு என்று பல நாட்டு மக்களுக்கு அறிய செய்த பெருமை ரஜினியை சாரும். ரஜினி படம் பார்க்கவேண்டும், ரஜினியிடம் பேச வேண்டும் என்பதற்காகவே தமிழ் கற்ற ஜப்பானியர்கள் உண்டு. அவர்கள் கன்னடம் கற்கவில்லை. இதை இந்த மண்ணின் மைந்தர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் கூட செய்ததில்லை. 


இதில் பணம் வந்ததும் ரஜினி தடம் மாறி விட்டாராம். ஆமாம் அவர் மட்டும் எம்ஜியார் மாதிரி இருந்திருந்தால் ஒரு பயலும் அவருக்கு எதிராக எழுதி இருக்கமாட்டான். எவனும் பேசி இருக்கமாட்டான். எந்திரன் தொழில் நுட்பத்தில் ஒரு மைல்கல். அதனை வரவேற்க மனமில்லாமல், வயிற்றெரிச்சலில் புகைந்து வாய்க்கு வந்ததை புலம்பி தள்ளி கொண்டிருக்கிறார்கள். இந்த வயசுல இவருக்கு இது தேவையா என்கிறார்கள். ஏனென்றால் இவர்கள் எல்லாம் ஐம்பதொம்போது வயசுலேயே தூக்கில் தொங்கி விடுவார்கள். இல்லை இவர்கள் பரம்பரையில் எல்லோரும் அப்படித்தான் போலும். எந்த ஒரு உழைப்பாளியும் தான் உழைப்பில் மீது அதீத நம்பிக்கை வைத்திருப்பதிலும், அதுபற்றி பெருமை பட கூறுவதிலும் என்ன தவறு இருக்கிறது?


இதில் புதுசா ஒரு கும்பல் படத்தில் சண்டை காட்சிகளில் ஈடுபடுவது ரஜினியே அல்ல. அலெக்ஸ் மார்டின் எனும் ஒருவர். ரஜினி மக்களை ஏமாற்றுகிறார் என்று கதறுகின்றார்கள். கஷ்டப்படுவது ஒருவன், கைத்தட்டல் வாங்குவது ஒருவன் என்ற ஜால்ரா பின்னூட்டம் வேறு. கதாநாயகர்கள் டூப் போட்டு நடிப்பது காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது என்பது குழந்தைக்கு கூட தெரியும். ஆனானப்பட்ட புருஸ்லீக்கே ஜாக்கிசான் என்னும் ஒரு டூப் நடிகர் தேவைப்பட்டார். புருஸ்லீ மீதான பொறாமையில் பொங்கிய பலர் இதனை ஆதாரத்துடன் வெளியிட்டனர். இதனை புருஸ்லீ மறுக்கவில்லை. ஜாக்கிசானும் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதே போல ஜாக்கிசானும் டூப் நடிகரை பயன்படுத்துவார். இதனை கேலி செய்து ஜெட்லி நடித்த ஒரு படத்தில் ஜாக்கி என்று ஒரு கோழை சினிமா நடிகர் பாத்திரமே உருவாக்கப்பட்டது. இதனை செய்தவர்கள்தான் காணாமல் போனார்கள். ஜாக்கிசான் அல்ல. ஏனென்றால் செய்தவர்கள் எண்ணத்தில்தான் விஷம் உள்ளது. ஜாக்கிசான் எண்ணத்தில் அல்ல. டூப் போட்டு நடிப்பதை மேடையிலேயே ரஜினி ஒப்புக்கொண்டார். கஷ்டப்படுவது ஒருவர். ஆனால் பெயர் எல்லாம் எனக்கு கிடைக்கிறது என்று.


சமுதாய நோக்கம் என்று சால்ஜாப்பு சொல்லி இதுமாதிரியான செயல்களில் ஈடுபட்டு வரும் பொதுநலவிரும்பிகள் சமுதாயத்துக்காக ஒரு துரும்பை கிள்ளி போட்டிருப்பார்களா என்பது சந்தேகமே. எந்திரன் படத்தை தயாரிக்க செலவழித்த பணத்தை வைத்து ஏதாவது நல்ல காரியம் செய்திருக்கலாமாம். ஏனென்றால் இவர்கள் மாதம் வாங்கும் சம்பளத்தில் தன் உணவுக்கு போக மீதியை எல்லாம் தானம் செய்து விடுவார்கள். சத்தமில்லாமல் ரஜினி செய்து வரும் நல்ல காரியங்கள் எத்தனை என்பது யாரும் அறியாதது. இந்த பதிவு என் எண்ணங்களை வெளிப்படுத்துவதற்காகவே எழுதப்பட்டது. இதனால் எதுவும் மாறப்போவதும் இல்லை. உங்கள் பார்வையின் படி, ரஜினி திருந்தப்போவதும் இல்லை. வீணாக வயிற்றெரிச்சல் படாமல் (ரஜினி போல் இல்லாமல் நீங்களாவது) எதாவது உருப்படியான காரியங்களில் ஈடுபடுங்கள். 


உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...

முழுவதும் படிக்க >>

August 7, 2010

அஜித்துக்கு நாலு, விஜய்க்கு அஞ்சு - ஆட்டம் ஆரம்பம்

விஜயின் ஆட்டம்
இளைய தளபதி விஜய் காவல் காதல், வேலாயுதம் ஆகிய படங்களில் நடித்து வருவதும், த்ரீ இடியட்ஸ் படத்தில் ஒப்பந்தம் ஆகி இருப்பதும் தெரிந்ததே. இது போக சீமான் இயக்கத்தில் பகலவன் படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டிருப்பதாகவும் செய்திகள் கசிகின்றன. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் சுறா நடிப்பதற்கு முன்னரே இப்படம் பற்றிய பேச்சு அடிபட்டது என்னவோ உண்மை. அதே போல இயக்குனர் லிங்குசாமியின் பெயரிடப்படாத ஒரு படத்திலும் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறாராம். இந்த வாய்ப்பு சிம்புவினால் நிராகரிக்கப்பட்டது என்றும், அந்த காரணத்துக்காகவே படத்தை ஒப்புக்கொண்டதாகவும் சொல்கிறார்கள். ஆக மொத்தம் விஜய் கையில் இருப்பது ஐந்து படங்கள். ஆனால் இது எந்த அளவுக்கு சாத்தியம் என்றும் சிந்திக்க வைக்கிறது. ராஜா, சித்திக் தவிர மற்ற மூன்று இயக்குனர்களும் இழுவை மன்னர்கள். குறைந்தது ஒரு வருடமாவது படப்பிடிப்பை நடத்தாமல் விடமாட்டார்கள். சங்கர் பற்றி சொல்லவே வேண்டாம். ஆனால் விஜய் வருடத்துக்கு இரண்டு படமாவது கொடுக்கவேண்டும் என்று நினைப்பவர். மேலும் சங்கர் படத்தில் நடிக்கும் நடிகர்கள் வேறு படங்களில் தலை காட்டக்கூடாது என்று அன்பு கட்டளை வேறுஇடுவார். அப்படி பார்த்தால் விஜயின் முகம் நமக்கு மறந்து போய்விடும் நிலை ஏற்பட்டுவிடும். இதே நிலைதான் விக்ரமுக்கும் ஏற்பட்டது. இதை விஜய் ரசிகர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்று தெரியவில்லை. 


அஜித் புது முடிவு

மறுபுறம் ஆண்டுக்கு ஒருபடம் என்ற ரீதியில் நடித்துவந்த அஜித் அடுத்தடுத்து நான்கு படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். அதில் முதல் படமான மங்காத்தா அஜித் திரை உலகில் அடி எடுத்து வைத்த நாளான ஆகஸ்ட் இரண்டாம் தேதியே துவங்கி விட்டது. இது தவிர கிரீடம் இயக்குனர் விஜய் இயக்கத்தில் ஒரு படமும், விஷ்ணுவர்தன் இயக்கும் பில்லா இரண்டாம் பாகத்திலும், கவுதம்மேனன் இயக்கும் ஒரு படத்திலும் நடிக்கிறார். இதில் அறிவுஜீவி இயக்குனர் கவுதம்மேனன் அளித்த பேட்டி அஜித் ரசிகர்கள் மனதில் ஒரு கசப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறது. அஜித் தரப்பில் இருந்து எந்த ரியாக்சனும் இல்லாத நிலையில், இந்த படம் பற்றிய முடிவு மர்மமாகவே இருக்கிறது. கவுதம் மேனன் இயக்கும் படத்தில் அஜித் நடிக்காமல் இருப்பதே நல்லது என்பது என் கருத்து. ஏனென்றால் இப்பேர்பட்ட உலகப்புகழ் பெற்ற, தானே சுயமாக சிந்தித்து, ஆங்கில படங்களையே மிஞ்சும் அளவுக்கு படமெடுக்கும் திறமையான ஒரு இயக்குனர் படத்தில், சாதாரணமான ஒரு நடிகன் நடிப்பது அந்த இயக்குனருக்குத்தான் இழுக்கு.

கலங்காத கல்மாடி

காமன்வெல்த் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் கனஜோராக முடித்து கவுண்டவுன் தொடங்கி விட்டது. இதற்கு செலவிட்ட தொகை மட்டும் சுமார் 35,000 கோடியாம். அடேங்கப்பா.... இந்தியா ஏழை நாடு என்று யார் சொன்னது? என்று சில வருடங்களுக்கு முன்னாள் அதாவது பத்து ஆண்டுகளுக்கு முன்னாள் ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் இந்தியா கிரிக்கெட் போட்டிகள், அது தொடர்பான விளம்பரங்கள் இவற்றுக்கு செலவு செய்யும் தொகை என்று சில நூறு கோடிகள் பற்றி விவரம் சொல்லி இருந்தார்கள். இப்போது அது ஆயிரம் கோடி ஆகி, பத்தாயிரம் கோடியும் ஆகி விட்டது. ஒருவேளை பொருளாதார வளர்ச்சி என்று சொல்கிறார்களே அது இதுதானா? சூப்பர் ஸ்டார் ஒருதடவை சொன்னார் "எங்கே பணம் இருக்கிறதோ அங்கே அரசியல் இருக்கும்." இது எவ்வளவு உண்மை. இந்த போட்டிகளுக்காக செலவிட்ட பணத்தில் ஏகப்பட்ட ஊழல்கள், முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. மூன்று பேரை சஸ்பெண்டும் செய்துவிட்டாயிற்று. சம்பந்தப்பட்ட அரசியல்வாதி சுரேஷ் கல்மாடி மட்டும் இன்னும் பதவி விலகாமல் இருப்பது சமூகத்தில் மீது, விளையாட்டு துறை மீது அவருக்கு இருக்கும் அளவு கடந்த அன்பையும், அக்கறையையும் காட்டுகிறது . தான் எவ்வளவு கேவலப்பட்டாலும், பதவியை மட்டும் துறந்து விடக்கூடாது. அப்புறம் மக்களுக்கு சேவை செய்ய முடியாது என்ற பாடத்தை எங்கு கற்றிருப்பார் என்று தெரியவில்லை. ஒருவேளை தமிழகத்திலா?

பொன்முடி கருத்து

விலைவாசியை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசித்து, பல கூட்டங்களை நடத்தி வந்த மத்திய மாநில அரசுகள் முடிவாக ஒருகருத்தை தெரிவித்துள்ளன. அதாவது, "விலைவாசி என்றால் உயரத்தான் செய்யும், அதை மக்கள் பொறுத்துக்கொண்டுதான் ஆகவேண்டும்." என்று கூறியுள்ளார்கள். மாண்புமிகு அமைச்சர் பொன்முடி, "எந்த காலத்தில் விலைவாசி உயரவில்லை? விலைவாசியை போல மக்களின் வருமானமும் உயர்ந்துள்ளது." என்று திருவாய் மலர்ந்துள்ளார். இப்படி சொன்ன முன்னாள் முதல்வர் பக்தவத்சலம் அவர்களுக்கு அண்ணா சொன்ன பதில், "விலைவாசியை கட்டுப்படுத்த முடியாவிட்டால் பதவி விலகுங்கள். நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் ." என்பது குறிப்பிடத்தக்கது. (இதற்கு முந்தைய பத்தியில் சொன்ன விஷயத்துக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை) 

பெற்றோர்களே கவனியுங்க..


நாளிதழில் வெளிவராத மனதை கலங்கடித்த ஒரு செய்தி. சென்னையில் இருக்கும் என் நண்பன் ஒருவனுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்கும் போது, "ஆடிப்பெருக்கு அன்று எங்க ஏரியாவில் இருக்கும் ஒரு பள்ளிக்கு விடுமுறை." என்று சொன்னான். "இப்பலாம் ஆடிப்பெருக்கு அன்று விடுமுறை கிடையாதே?" என்று கேட்டேன். அவன் காரணம் வேறு என்று சொன்னதை கேட்டு திடுக்கிட்டேன்.
பள்ளியில் மாணவன் ஒருவன் ஆசிரியை ஒருவர் திட்டியதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டானாம். பெற்றோர்கள் எல்லாம் கொதிப்படைந்து போய் பள்ளியை நோக்கி படையெடுக்க, விடுமுறை அறிவித்து விட்டார்கள். இதில் திடுக்கிடும் செய்தி என்னவென்றால் அந்த மாணவனின் வயது பத்து. ஐந்தாம் வகுப்புதான் படிக்கிறானாம். கேட்டதும் அதிர்ச்சியில் ஆடிபோய் விட்டேன்.


ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு போகும்படி செய்தது எது? அந்த ஆசிரியை திட்டிய வார்த்தைகளா? கண்டிப்பாக இருக்காது. இப்போதெல்லாம் பெரும்பாலான நகர்ப்புற பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களை கண்டிப்பதே இல்லை. நாம் அவமானப்பட்டால் தற்கொலை செய்து கொள்ளவேண்டும் என்று முடிவுகட்டும் அளவுக்கு அவன் மனதை பாதித்தது வேறு ஒரு காரணம். அந்த காரணம் நமக்கும் தெரியும். மவுனமாக ஒப்புக்கொள்வோம். ஆனால் யாரும் சட்டை செய்வது கிடையாது. ஏனென்றால் இது சமூக பிரச்சனை அல்லவே? நம் குழந்தை என்று வந்தால்தான் பிரச்சனை. பெரும்பாலான வீடுகளில் பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்றபின் மாலை மூன்று மணிக்கே வீட்டுக்கு வந்து விடும் குழந்தைகள் சுமார் நான்கு மணிநேரம் தனிமையில் பொழுது போக்குகிறார்கள். வீட்டிற்கு வந்த பின்னரும் அந்த குழந்தை தனிமையிலே விடப்படுகிறது. அதன் துணை கார்ட்டூன் கதாபாத்திரங்களும், பேசாத பொம்மைகளும்தான். எனவே அக்குழந்தை தனக்கு ஒரு பிரச்சனை என்று வரும்போது நம் பெற்றோர்கள் நமக்கு துணை என்று நினைப்பதில்லை. கூடுதலாக தான் பார்க்கும் தொலைகாட்சி மற்றும் திரைப்படங்களில் விதவிதமாக சாவது எப்படி என்று காட்டுவதை முழுவதுமாக உள்வாங்கி விடுகிறது. 

"பெற்றோர்களே, உங்கள் குழந்தையின் எதிர்காலத்துக்காக உழைக்கிறேன் பேர்வழி என்று அதன் நிகழ்காலத்தை சிதைத்து விடாதீர்கள்." 


உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க.. 
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...

முழுவதும் படிக்க >>

August 3, 2010

ஆண்கள் எல்லாம் சிங்கம் மாதிரி...

எனக்கு வந்த ஒரு மின்னஞ்சலை தமிழ் படுத்தி தந்திருக்கிறேன். கண்டிப்பாக சிரிக்க மட்டும்...

ஆண்களே!!! நீங்கள் ஒரு சிங்கம் மாதிரி..  



நீங்கள் இந்த உலகத்தை ஆளப்பிறந்தவர்கள் ....


இந்த உலகிலேயே மிகவும் பலம் வாய்ந்தவர்கள்....

பார்வையாலேயே மிரட்டும் வித்தை அறிந்தவர்கள்....

எதையும் செய்யும் சுதந்திரம் மிக்கவர்கள்....

யாராக இருந்தாலும் உங்களுக்கு கீழேதான்... 

அனைவரும் விரும்பும் பாசக்கார மனிதர்....

எப்போதும் ஜென்டில்மேன் நீங்கள்...

நினைத்ததை முடிக்கும் வல்லமை படைத்தவர்.... 

உங்களுக்கு கோபம் வந்தால் நாடு தாங்காது...

மொத்தத்தில் உங்களை கண்டால் நாடே அதிரும்...
என்னதான் நாட்டையே நடுங்க வைக்கும் சிங்கமாக இருந்தாலும்,
:
:
:
:
:
:
:
:
:
:
உங்கள் வீட்டை பொறுத்தவரை நீங்கள் ஒரு காமெடி பீஸ்தான். ஆண்டவன் உங்களுக்கும் ஒரு ஆப்பு வைத்திருக்கிறான். 



உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...



முழுவதும் படிக்க >>
Related Posts Plugin for WordPress, Blogger...